உள்ளூர் செய்திகள்

வாகனம் மோதி முதியவர் படுகாயம்

Published On 2023-01-12 08:17 GMT   |   Update On 2023-01-12 08:17 GMT
  • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ராமதேவம் ஆதி திராவிடர் தெருவை சேர்ந்தவர் நடை பயிற்சி சென்று கொண்டிருந்தார்.
  • அப்போது அவர் பின்னால் அதிவேகமாக வந்த வாகனம் ஞானராஜ் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ராமதேவம் ஆதி திராவிடர் தெருவை சேர்ந்தவர் ஞானராஜ் (வயது 63). கூலித் தொழிலாளி.

இவர் தனது வீட்டில் இருந்து செட்டியாம்பாளையம் கருப்பனார் கோவில் வரை தினமும் நடைபயிற்சி செல்வது வழக்கம். வழக்கம்போல் சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்து ராமதேவம் வக்கீல் சதாசிவம் என்பவர் வீடு அருகே நடை பயிற்சி சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவர் பின்னால் அதிவேகமாக வந்த வாகனம் ஞானராஜ் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து நல்லூர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வடிவேலன் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி நிற்காமல் சென்ற வாகனம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News