உள்ளூர் செய்திகள்
- 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
- அப்போது அவர் மீது வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
சேலம்:
சேலம் மாவட்டம் குரங்குச்சாவடி அம்மன் பேக்கரி முன்பு சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் மீது வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்து அவர் பரிதாபமாக இறந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த விபத்து குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் பற்றி
விசாரணை நடத்தி வரு கிறார்கள். இறந்த முதியவர் பெயர் மற்றும் ஊர் முகவரி தெரியவில்லை. இதனால் அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க முடியவில்லை. இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.