உள்ளூர் செய்திகள்
மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு
- எதிரே வந்த மோட்டார் சைக்கிள் அவர்மீது மோதியது.
- பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சுள்ளிகுட்டையை அடுத்த பெரியசப்படி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னபையன் (வயது60). தொழிலாளி.
இவர் சம்பவத்தன்று சப்படி பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்றார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் அவர்மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.