உள்ளூர் செய்திகள்
சங்கராபுரம் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை
- கண்ணன் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
- அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன்(75). இவர் விஷம் குடித்து மயங்கி கிடந்தார், இவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கண்ணன் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.