உள்ளூர் செய்திகள்

அதிகாலை வாலிபர் ெரயில் முன் பாய்ந்து தற்கொலை

Published On 2022-07-26 10:07 GMT   |   Update On 2022-07-26 10:07 GMT
  • அதிகாலை சேலம் அருகே உள்ள வேம்படிதாளம் பகுதிக்கு வந்தார். பின்னர் அங்கு சென்று கொண்டிருந்த ெரயில் முன்பு திடீரென பாய்ந்தார்.
  • இதில் ரெயில் மோதி கலையரசன் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சேலம்:

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்தவர் கலையரசன் (வயது 23). இவர் இன்று அதிகாலை சேலம் அருகே உள்ள வேம்படிதாளம் பகுதிக்கு வந்தார். பின்னர் அங்கு சென்று கொண்டிருந்த ெரயில் முன்பு திடீரென பாய்ந்தார். இதில் ரெயில் மோதி கலையரசன் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை பார்த்த அந்த பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் சம்பவம் குறித்து ெரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்து சென்ற போலீசார், கலையரசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார், விசாரணை நடத்திய போது, கலையரசன் வாழ பிடிக்காமல் ரெயின் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து ெரயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள் .தகவல் அறிந்து ஆஸ்பத்திரிக்கு வந்த உறவினர்கள் கலையரசனின் உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News