உள்ளூர் செய்திகள்

மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

Published On 2023-09-25 10:23 GMT   |   Update On 2023-09-25 10:23 GMT
  • மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமையில் நாளை குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
  • நட்சத்திரா நகர், நாஞ்சிக்கோட்டை ஆகிய பகுதிகளை சார்ந்த மின் நுகர்வோர்கள் ஏதேனும் குறைகள் இருந்தால் நேரில் வந்து மனு அளிக்கலாம்.

தஞ்சாவூர்,

தஞ்சை மின்வாரிய செயற்பொறியாளர் மணி வண்ணன் வெளியி ட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சாவூர் நீதிமன்ற சாலையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.

மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமையில் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

இதில் தஞ்சாவூர் நகரிய கோட்டத்திற்கு உட்பட்ட நகர எல்லையான தெற்கு வீதி, வடக்கு வீதி, மேல வீதி, கரந்தை, பள்ளி அக்ரஹாரம், கீழவாசல், தொல்காப்பியர் சதுக்கம், மேரீஸ் கார்னர், அருளானந்த நகர், பர்மா காலனி, நிர்மலா நகர், யாகப்பா நகர், அருளானந்தம்மாள் நகர், பழைய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, காந்திஜி சாலை, மருத்துவக் கல்லூரி சாலை, நீலகிரி, மானோஜிபட்டி, ரஹ்மான் நகர், ரெட்டிபாளையம் சாலை, சிங்கபெருமாள் கோவில், ஜெபமாலைபுரம், வித்யா நகர், மேல வெளி ஊராட்சி, தமிழ்ப் பல்கலைக்கழகக் குடியிருப்பு வளாகம், மாதாகோட்டை சாலை, புதிய பேருந்து நிலையம், திருவேங்கட நகர், இனாத்துக்கான்பட்டி, நட்சத்திரா நகர், நாஞ்சிக்கோட்டை ஆகிய பகுதிகளை சார்ந்த மின் நுகர்வோர்கள் ஏதேனும் குறைகள் இருந்தால் நேரில் வந்து மனு அளிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News