உள்ளூர் செய்திகள்

தொடர் மழையால் நிரம்பிய சூளகிரி சின்னார் அணை

Published On 2022-08-29 14:39 IST   |   Update On 2022-08-29 14:39:00 IST
  • 500-க்கும் மேற்பட்டவிளை நிலங்கள் பாசன வசதி பெறும் என விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
  • சின்னார்அணையில் பல்வேறு கிராம மக்கள் வந்து பார்வையிடுவதுடன் இளைஞர்கள் ஆனந்த குளியல் போட்டு வருகின்றனர்.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே வேம்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள சின்னார் அணை தொடர் மழையால் நிரம்பி வழிந்து செல்கிறது.

இதனால் சுற்றுவட்டார கிராமங்களான மாரண்டப்பள்ளி, வேம்பள்ளி, ஒன்றியுர், தாசன்புரம், தேக்களப்பள்ளி, சென்னப்பள்ளி, சுண்டகிரி, சின்னார், மூறுக்கனப்பள்ளி,மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள 500-க்கும் மேற்பட்டவிளை நிலங்கள் பாசன வசதி பெறும் என விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சின்னார்அணையில் பல்வேறு கிராம மக்கள் வந்து பார்வையிடுவதுடன் இளைஞர்கள் ஆனந்த குளியல் போட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News