உள்ளூர் செய்திகள்

அரசு கலைகல்லூரி மாணவர்களுக்கு போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2022-08-04 15:36 IST   |   Update On 2022-08-04 15:36:00 IST
  • காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
  • போதை பொருளின் தீமைக்கள் குறித்து விரிவாக எடுத்து கூறினர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு கல்லூரி மாணவர்கள் விடுதியில் காவல்துறை சார்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. காவல்துறை துணை கண்காணிப்பாளர் மகேஸ்வரன், பி1 இன்ஸ்பெக்டர் மணிகுமார்,மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு போதை பொருளின் தீமைக்கள் குறித்து விரிவாக எடுத்து கூறினர். மாணவ பருவங்களில் போதை பொருட்களை அறவே தவிர்த்து கலவிக்கு மட்டுமே முக்கியம் அளித்து வாழ்கையில் மேன்மையடையும் வழிகள் குறித்தும் பல்வேறு ஆலோசகளை வழங்கினர்.

Tags:    

Similar News