உள்ளூர் செய்திகள்

உளுந்தூர்பேட்டை அருகே காருக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்த டிரைவர்

Published On 2023-01-10 12:49 IST   |   Update On 2023-01-10 12:49:00 IST
  • சொந்த வேலை காரணமாக அருப்புக்கோட்டையிலி ருந்து சென்னைக்கு வந்தார்.
  • ஜெய கணேசன் காரில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

கள்ளக்குறிச்சி:

விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டை பகுதியை சேர்ந்தவர் ெஜயகணேசன் (வயது 39) கார் டிரைவர். சம்பவத்தன்று காரில் சொந்த வேலை காரணமாக அருப்புக்கோட்டையிலி ருந்து சென்னைக்கு வந்தார். அப்போது எறைஞ்சி சாலை அருகே காரை நிறுத்தி காருக்குள் தூங்கியுள்ளார். இதனையடுத்து ஜெய கணேசின் உறவினர்கள் போன் மூலம் இவரை தொடர்பு கொண்டபோது இவர் போனை எடுக்க வில்லை. இதனால் போலீ சாருக்கு தகவல் கொடுத்த னர்.

தகவலின்பேரில் எடைக்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது ஜெய கணேசன் காரில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனையடுத்து போலீசார் ஜெயகணேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ள குறிச்சி அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெய கணேஷ் எப்படி இறந்தார் ? யாரேனும் கொலை செய்தனரா அல்லது வேறு எதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை

Tags:    

Similar News