உள்ளூர் செய்திகள்

விபத்துக்குள்ளான லாரியை படத்தில் காணலாம்.

சங்கராபுரம் அருகே மரத்தில் லாரி மோதி டிரைவர் பலி

Published On 2022-12-23 08:51 GMT   |   Update On 2022-12-23 08:51 GMT
  • இவர் கள்ளக்குறிச்சியில் இருந்து சங்கராபுரம் நோக்கி இன்று காலை லாரியை ஓட்டிவந்தார்.
  • போலீசார் விரைந்து சென்று லாரியை பொக்லைன் எந்திரம் மூலம் இழுத்து சீரமைத்தனர்.

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் மாமாந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 32). லாரி டிரைவர். இவர் கள்ளக்குறிச்சியில் இருந்து சங்கராபுரம் நோக்கி இன்று காலை லாரியை ஓட்டிவந்தார். மேலேறி கிராமம் ஏரி கரையோரம் லாரி சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. தறிகெட்டு ஓடிய அந்த லாரி எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்ற புளியமரத்தில் மோதியது. இந்த விபத்தில் லாரி டிரைவர் முருகன் சம்பவ இடத்தி லேயே உடல் நசுங்கி பலியானார்.

விபத்தில் சிக்கிய லாரி நடுரோட்டில் நின்றதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த சங்கராபுரம் போலீசார் விரைந்து சென்று லாரியை பொக்லைன் எந்திரம் மூலம் இழுத்து சீரமைத்தனர். விபத்தில் பலியான முருகனின் உடல் பிரேத பரிசோத னைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சங்கராபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News