உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

திண்டுக்கல் அருகே டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலி

Published On 2022-10-19 07:09 GMT   |   Update On 2022-10-19 07:09 GMT
  • நிலை தடுமாறி டிராக்டர் கவிந்ததில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
  • தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் அருகே இரண்டலப்பாறை சந்தியாகப்பர் கோவில் தெருவை சேர்ந்தவர் அருள்தாஸ்(45). இவர் சிறுமலை செக்போஸ்ட் அருகே உள்ள தனியார் தோட்டத்தில் வேலை பார்த்து வந்தார்.

இரண்டலபாறையில் இருந்து டிராக்டர் ஓட்டிவந்தார். அப்போது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் டிராக்டர் அவர் மீது கவிழ்ந்தது. இந்த விபத்தில் அருள்தாஸ் சம்பவஇடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி, ஏட்டு கருணாகரன் தலைமையிலான தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News