உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் நகை, பணம் திருடிய டிரைவர் கைது

Published On 2023-04-26 14:58 IST   |   Update On 2023-04-26 14:58:00 IST
  • நல்லதம்பி டீக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
  • ரூ.2 லட்சம் நகைகள், ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் பணம் திருட்டு போனது.

ஊட்டி,

ஊட்டி தலைகுந்தா பகுதியை சேர்ந்தவர் நல்லதம்பி (வயது 30). இவர் அங்கு டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். தனது பெற்றோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். சமீபத்தில் நல்லதம்பியின் சகோதரி விபத்தில் சிக்கியதால், அவரை பார்ப்பதற்காக பெற்றோருடன் உடுமலைக்கு சென்றார். பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நல்லதம்பி உள்ளே சென்று பார்த்தார். அப்போது ரூ.2 லட்சம் நகைகள், ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் பணம் திருட்டு போனது. இதுகுறித்து அவர் புதுமந்து போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அல்லிராணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் ஊட்டி தலைகுந்தாவை சேர்ந்த டிரைவர் சாகுல் ஹமீது என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News