உள்ளூர் செய்திகள்

வெங்கடேசன்

திண்டுக்கல் அருகே சிறுமியை கர்ப்பிணியாக்கிய பத்திர எழுத்தர் போக்சோவில் கைது

Published On 2022-06-28 08:25 GMT   |   Update On 2022-06-28 08:25 GMT
  • 17 வயது சிறுமியை காதலித்து பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்த வாலிபர்.
  • போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள செந்துறையைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 23).

இவர் அதே பகுதியில் பத்திர எழுத்தராக வேலை பார்த்து வந்தார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த 8ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்த 17 வயது சிறுமியுடன் பழகி வந்தார்.

அவரை காதலிப்பதாக கூறி உல்லாசமாக இருந்துள்ளார். இதில் மாணவி கர்ப்பமானார். அவர் உடல்நிலை மாறுதலடைந்ததைக் கண்டு அவரது பெற்றோர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

அப்போது அவர் 3 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து நடந்த விபரங்களை கேட்டபோது அவர் வெங்கடேசன் தன்னை பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார்.

இது குறித்து நத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜ சேகர், மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தின குமாரி ஆகியோர் வழக்குபதிவு செய்து வெங்கடேசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News