ஆலங்குளத்தில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம்
- தி.மு.க. சார்பில் இல்லம் தேடி உறுப்பினர் சேர்க்கை முகாம் நெட்டூரில் நடந்தது.
- மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதன், நகர் தாயகம் கவி எம்.எல்.ஏ. ஆகியோர் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தனர்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் சந்தன மாரியம்மன் கோவில் திடலில் தி.மு.க. சார்பில் இல்லம் தேடி உறுப்பினர் சேர்க்கை முகாம் நெட்டூரில் நடந்தது. ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் திவ்யா மணிகண்டன் தலைமை தாங்கினார். ஒன்றியச் செயலாளர் செல்லத்துரை, தொழிலதிபர்கள் மாரிதுரை, மணிகண்டன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
தி.மு.க. மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதன், சென்னை திரு.வி.க. நகர் தாயகம் கவி எம்.எல்.ஏ. ஆகியோர், முக்கிய வீதிகளில் உள்ள வீடுகளுக்கு நேரடியாகச் சென்று, தி.மு.க. இளைஞரணிக்கு உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தனர்.
18 வயது நிரம்பிய இளைஞர்களிடம் வாக்காளர் அடையாள அட்டை நகல் பெற்றுக்கொண்டு, உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கி உறுப்பினராக சேர்த்தனர்.
முகாமில் இளைஞரணி அமைப்பாளர் மணிமாறன், உதயநிதி மன்ற மாவட்ட துணைச் செயலாளர் அருணன், உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன், கிளைச் செயலாளர் கணேசன், பொருளாளர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.