உள்ளூர் செய்திகள்

தி.மு.க. இளைஞரணி வாகன பேரணிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஒட்டன்சத்திரத்தில் தி.மு.க. இளைஞரணி வாகன பேரணி

Published On 2023-11-27 05:44 GMT   |   Update On 2023-11-27 05:44 GMT
  • தி.மு.க. இளைஞரணி சார்பில் 2 வது மாநில மாநாடு வருகின்ற டிசம்பர் மாதம் 17ம் தேதி சேலத்தில் நடக்கிறது.
  • இதனையொட்டி மோட்டார் சைக்கிள் பேரணி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களின் வழியாக திண்டுக்கல் மாவட்டத்திற்கு வந்தது.

ஒட்டன்சத்திரம்:

தி.மு.க. இளைஞரணி சார்பில் 2 வது மாநில மாநாடு வருகின்ற டிசம்பர் மாதம் 17ம் தேதி சேலத்தில் நடக்கிறது. இதனையொட்டி மோட்டார் சைக்கிள் பேரணி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களின் வழியாக திண்டுக்கல் மாவட்டத்திற்கு வந்தது. ஒட்டன்சத்திரம் பஸ் நிலையம் முன்பு நகர செயலாளர் வெள்ளைச்சாமி தலைமையில் வாகன பேரணிக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் வேலுச்சாமி எம்.பி., திண்டுக்கல் மேற்கு மாவட்ட துணைச்செய லாளர் ராஜாமணி, ஒட்ட ன்சத்திரம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜோதீஸ்வரன், தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கராஜ், நகராட்சி தலைவர் திருமலைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் பாலு, மாணவர் அணி மாநில துணைச்செயலாளர் பொன்ராஜ், திண்டுக்கல் மேற்கு மாவட்ட இளைஞ ரணி அமைப்பாளர் ஹரி ஹரசுதன், துணை அமை ப்பாளர் ரவிசங்கர் உள்ளி ட்ட ஏராளமான நிர்வாகிகள் இரு சக்கர வாகன பேரணி க்கு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

Tags:    

Similar News