உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் தி.க.வினர் ஆர்ப்பாட்டம்

Published On 2023-07-15 15:04 IST   |   Update On 2023-07-15 15:04:00 IST
  • வங்கி பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் மத்திய அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
  • மாவட்ட தலைவர் அறிவரசன் தொடக்க உரையாற்றினார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியில் திராவிடர் கழக இளைஞர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் புதிய பஸ் நிலையம் அண்ணா சிலை அருகில் நேற்று நடந்தது.

வங்கி பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் மத்திய அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதற்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் சிலம்பரசன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சீனிமுத்து. ராஜேசன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் மாணிக்கம், துணை தலைவர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட தலைவர் அறிவரசன் தொடக்க உரையாற்றினார். பொதுக்குழு உறுப்பினர் திராவிடமணி, தலைமை கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்செல்வி, நிர்வாகிகள் கிருஷ்ணன், சிவராஜ், ராஜேந்திரபாபு, மாரப்பன், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊத்தங்கரை ஒன்றிய இளைஞர் அணி தலைவர் சரவணன் கூறினார்.

Tags:    

Similar News