உள்ளூர் செய்திகள்

தஞ்சையில், மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது.

மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி

Published On 2022-11-27 15:34 IST   |   Update On 2022-11-27 15:34:00 IST
  • சப் -ஜூனியர், ஜூனியர், சீனியர், யூத் ஆகிய நான்கு பிரிவின் கீழ் போட்டிகள் நடைபெற்றன.
  • ஒவ்வொரு பிரிவுகளிலும் தலா 10 பேர் என 40 ஆண்கள், 40 பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தஞ்சாவூர்:

தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு உள்ளரங்கு மைதானத்தில் 41-வது மாவட்ட சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது . 2 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியை நேற்று மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் தொடங்கி வைத்தார். மாவட்ட சிலம்பா ட்ட கழகம் தலைவர் புனிதா கணேசன், செயலாளர் ஜலேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து 560 பேர் கலந்து கொண்டனர். போட்டி யானது ஆண்கள் மற்றும் பெண்க ளுக்கு தனித்தனியாக நடைபெற்றது. சப் -ஜூனியர், ஜூனியர், சீனியர், யூத் ஆகிய நான்கு பிரிவின் கீழ் போட்டிகள் நடைபெற்றன.

இன்று 2-வது நாளாக சிலம்பாட்ட போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

தொடர்ந்து மாலை வரை போட்டி நடைபெறும். முடிவில் ஒவ்வொரு பிரிவுகளிலும் தலா 10 பேர் என 40 ஆண்கள் , 40 பெண்கள் தேர்வு செய்யப்படஉள்ளனர். தேர்வு செய்யப்படுபவர்கள் மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டியில் கலந்து கொள்வர்.

முன்னதாக ஆணையர் சரவணகுமார் சாதனையை பாராட்டி சிலம்பாட்ட கழகம் சார்பில் வரலாற்று பதிவு பட்டயம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News