உள்ளூர் செய்திகள்

பொதுமக்களுக்கு தார்பாய் வழங்கப்பட்டது.

மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தார்பாய் வழங்கல்

Published On 2023-01-23 08:12 GMT   |   Update On 2023-01-23 08:12 GMT
  • கூரை வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு ரூ. 2.50 லட்சம் மதிப்பில் தார்பாய்.
  • நகர்மன்ற தலைவர் தார்பாய் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி பாலம் தொண்டு நிறுவனம் சார்பில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட பெரியநாயகிபுரம், விசுவகொத்தமங்கலம், வீரன் நகர் பகுதியை சேர்ந்த 376 கூரை வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு ரூ. 2.50 லட்சம் மதிப்பில் தார்பாய் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.

நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் மக்களுக்கு தார்பாய் வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் கவுன்சிலர் கோமதி செந்தில்குமார், பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News