உள்ளூர் செய்திகள்

திசையன்விளை செல்வமருதூர் ரேஷன் கடையில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியபோது எடுத்த படம்.


திசையன்விளையில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் - வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தொடங்கி வைத்தார்

Published On 2023-01-10 09:16 GMT   |   Update On 2023-01-10 09:16 GMT
  • திசையன்விளை செல்வமருதூர் பகுதியில் உள்ள ரேஷன் கடையில், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி தொடங்கி வைத்தார்.
  • மேலும் ரேஷன் கடை, இடையன்குடி, க.உவரி, க.நவ்வலடி, க.புதூர் பஞ்சாயத்து புலிமான்குளம், உறுமன்குளம் பஞ்சாயத்து பெட்டைக்குளம் பகுதிகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி தொடங்கி வைத்தார்.

திசையன்விளை:

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் செய்யப்பட்டது.

திசையன்விளை செல்வமருதூர் பகுதியில் உள்ள ரேஷன் கடையில், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் சாந்தி மருத்துவமனை அருகில் உள்ள ரேஷன் கடை, இடையன்குடி, க.உவரி, க.நவ்வலடி, க.புதூர் பஞ்சாயத்து புலிமான்குளம், உறுமன்குளம் பஞ்சாயத்து பெட்ைடக்குளம் பகுதிகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி தொடங்கி வைத்தார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, ஒன்றிய கவுன்சிலர்கள் கெனிஸ்டன், இசக்கிபாபு, பஞ்சாயத்து தலைவர் ராதிகா சரவணகுமார், ஜேகர், வைகுண்டம், பொன்இசக்கி, முருகேசன், திசையன்விளை பேரூ ராட்சி கவுன்சிலர்கள் கண்ணன், உதயா, நரேஷ் அரவிந்த் மற்றும் நிர்வாகிகள் நாகமணி மார்த்தாண்டம், அமைச்சி யார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News