உள்ளூர் செய்திகள்

முகாமில் தங்கியுள்ள மக்களிடம் போலீஸ் சூப்பிரண்டு நிஷா பேசினார்.

முகாமில் தங்கியுள்ள மக்களுக்கு பால், பிரட் வழங்கல்

Published On 2022-12-10 07:25 GMT   |   Update On 2022-12-10 07:25 GMT
  • அதிக குளிர் காற்று வீசுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
  • அலைகளின் சீற்றத்தால் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது.

சீர்காழி:

மாண்டஸ் புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடல் சீற்றம் மற்றும் கனமழை பெய்து வருகிறது.

அதிக குளிர் காற்று வீசுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கடல் சீற்றத்தின் காரணமாக கடலோர கிராமங்களான தொடுவாய், மடவாமேடு, உள்ளிட்ட கிராமங்களில்10 அடிக்கு மேல் கடல் அலைகளின் சீற்றத்தால் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது.

இதனால் அப்பகுதி மீனவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

கடல் நீர் புகுந்த தொடுவாய் கிராம மக்கள் அதே பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளியிலும் புயல் பாதுகாப்பு மைய ங்களுக்கு தங்கியுள்ளனர்.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா, முகாமில் தங்கி உள்ள மக்களை நேரில் பார்வையிட்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

300-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பால், பிரட் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.

அவருடன் சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமெக், இன்ஸ்பெக்டர் பாலச்சந்தர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News