உள்ளூர் செய்திகள்

முதியோருக்கு ஆர்டிஓ கீர்த்தனாமணி விலையில்லா வேட்டி, சேலை வழங்கினார்.

முதியோர் உதவித்தொகை பெறும் 50 பேருக்கு விலையில்லா வேட்டி- சேலைகள் வழங்கல்

Published On 2022-10-23 06:04 GMT   |   Update On 2022-10-23 06:04 GMT
  • முதியோர் உதவித்தொகை 50பேருக்கு தீபாவளி விழா தாலுக்கா அலுவலகத்தில் நடைபெற்றது.
  • மாரிமுத்து எம்எல்ஏ, மன்றத்தலைவர் கவிதா பாண்டியன் ஆகியோர் விலையில்லா வேட்டி சேலை வழங்கினர்.

திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுக்காவில் முதியோர் உதவித்தொகை பெறும் 50பேருக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி சேலை வழங்கும் விழா தாலுக்கா அலுவலகத்தில் நடைபெற்றது.

ஆர்டி.ஓ கீர்த்தனா மணி தலைமை வகித்தார்.

துணை கலெக்டர் கண்மணி முன்னிலை வகித்தார்.

தாசில்தார் மலர்கொடி வரவேற்றார்.

மாரிமுத்து எம்எல்ஏ, மன்றத்தலைவர் கவிதா பாண்டியன் ஆகியோர் விலையில்லா வேட்டி சேலை வழங்கினர்.

இதில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சிவகுமார், வி.ஏ.ஓ.க்கள் முருகானந்தம், தினேஷ்குமார், உயரதிகாரிகள், முதியோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News