உள்ளூர் செய்திகள்

அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு கிராம உதயம் சார்பில் 200 மரக்கன்றுகள் வழங்கல்

Published On 2023-10-16 09:10 GMT   |   Update On 2023-10-16 09:10 GMT
  • கோபாலசமுத்திரம் கிராம உதயம் தலைமை அலுவலகம் சார்பில் 200 மரக்கன்றுகள் வழங்குதல், பராமரித்தல் விழா நடைபெற்றது.
  • கிராம உதயம் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுந்தரேசன் தலைமை தாங்கி மரக்கன்றுகள் வழங்கினார்.

நெல்லை:

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு கோபாலசமுத்திரம் கிராம உதயம் தலைமை அலுவலகம் சார்பில் 200 மரக்கன்றுகள் வழங்குதல், நடுதல், பராமரித்தல் விழா நடைபெற்றது. கிராம உதயம் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுந்தரேசன் தலைமை தாங்கி மரக்கன்றுகள் வழங்கினார்.

கிராம உதயம் ஆலோ சனை குழு உறுப்பினர் வழக்கறிஞர் புகழேந்தி பகத்சிங் முன்னிலை வகித்தார். கிராம உதயம் நிர்வாக மேலாளர் மகேஸ்வரி வரவேற்று பேசினார். கிராம உதயம் பகுதி பொறுப்பாளர் செந்தில்குமார், பாலசுப்ரமணியம், ஆறுமுகத்தாய், குமாரி ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். கிராம உதயம் தனி அலுவலர் மீனாட்சி நன்றி கூறினார்.

Tags:    

Similar News