உள்ளூர் செய்திகள்

மது வாங்கி தராததால் தகராறு: நண்பரை பாட்டிலால் தாக்கிய வாலிபர்கள் மீது வழக்கு

Published On 2022-07-04 10:03 GMT   |   Update On 2022-07-04 10:03 GMT
  • 2 பேரும் மதுபாட்டிலால் மஞ்சுநாதனை தாக்கியுள்ளனர்.
  • காயமடைந்த மஞ்சுநாதன் பர்கூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகேயுள்ள காசிநாயனபள்ளி பகுதியை சேர்ந்தவர் மஞ்சுநாதன்(23). இவர் தனது நண்பர்களான ஓசூரை சேர்ந்த விஜய் (வயது22), சந்தோஷ் (24) ஆகியோருடன் மது அருந்த சென்றுள்ளார்.

இந்த நிலையில் போதை தலைக்கேறிய நிலையில் மேலும் மது வாங்கி தரும்படி மஞ்சுநாதனிடம், விஜயும், சந்தோசும் தகராறு செய்துள்ளனர். ஆனால் மஞ்சுநாதன் மது வாங்கி தர மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த 2 பேரும் மதுபாட்டிலால் மஞ்சுநாதனை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த மஞ்சுநாதன் பர்கூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளனர்.

இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கந்திகுப்பம் போலீசார் விஜய் மற்றும் சந்தோஷ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News