உள்ளூர் செய்திகள்

இன்னிசை நிகழ்ச்சியில் தகராறு; 4 பேர் கைது

Published On 2022-11-30 10:12 GMT   |   Update On 2022-11-30 10:12 GMT
  • வெண்ணந்தூர் அருகே உள்ள வடுகம்பாளையத்தில் சில தினங்களுக்கு முன்பு ஆர்கெஸ்ட்ரா நிகழ்ச்சி நடந்தது.
  • ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

ராசிபுரம்:

ராசிபுரம் தாலுகா வெண்ணந்தூர் அருகே உள்ள வடுகம்பாளையத்தில் சில தினங்களுக்கு முன்பு ஆர்கெஸ்ட்ரா நிகழ்ச்சி நடந்தது. அப்போது சப்பை யபுரத்தைச் சேர்ந்த அஜித் ( வயது 25) என்பவருக்கும் வடுகம்பாளையத்தைச் சேர்ந்த சக்திவேல் (25) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. அங்கிருந்த வர்கள் இருவரையும் சமா தானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் மறுநாள் வடுகம்பாளையத்தைச் சேர்ந்த சக்திவேல் அதே ஊரைச் சேர்ந்த அவரது நண்பர்கள் பெரியசாமி(27), ராஜேஸ்குமார் (28), ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்த சபரி (18) ஆகியோர் அஜித் வீட்டுக்குச் சென்று அஜித் மற்றும் அவரது நண்பர் ஹரிஹரன் ஆகி யோரை தாக்கியதாக கூறப்படுகிறது. காயம் அடைந்த அஜித் மட்டும் ஹரிஹரன் இருவரும் ராசிபுரம் மற்றும் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இது பற்றி வெண்ணந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று சக்திவேல், பெரியசாமி, ராஜேஷ்குமார், சபரி ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். பிறகு அவர்களை ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.நீதிபதி உத்தரவின் பேரில் அவர்கள் 4 பேரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

Tags:    

Similar News