உள்ளூர் செய்திகள்

டீ நன்றாக இல்லை என தகராறு: மாஸ்டரை கத்தியால் தாக்கிய வாலிபர் மீது வழக்கு

Published On 2022-06-13 15:54 IST   |   Update On 2022-06-13 15:54:00 IST
  • டீ நன்றாக இல்லை எனக் கூறி அவரிடம் தகராறு செய்தார்.
  • மிரட்டல் விடுத்து திடீரென கத்தியால் தாக்கினார்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜாபர் தெருவை சேர்ந்தவர் ரியாஸ்பாஷா (வயது56),

இவர் ராயக்கோட்டை சாலையில், டீக்கடை நடத்தி வருகிறார். இந்த கடையில், ஷெனான் (34) என்பவர் டீ மாஸ்டராக வேலை செய்து வருகிறார்.

இந்தநிலையில், நேற்று ஓசூர் சாந்திநகரை சேர்ந்த சமீர் அகமத் (24) என்பவர் டீ குடிக்க வந்தார். பின்னர், ஷெனானை அழைத்து, டீ நன்றாக இல்லை எனக் கூறி அவரிடம் தகராறு செய்தார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில், அவருக்கு மிரட்டல் விடுத்து திடீரென கத்தியால் தாக்கினார். இதில் காயமடைந்த ஷெனான், சிகிச்சைக்காக, ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து ஓசூர் டவுன் போலீசார், சமீர் அகமது மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Similar News