உள்ளூர் செய்திகள்
என்.எல்.சி பற்றி அவதூறு பரப்பிய தலைமை காவலர் பணியிடை நீக்கம்
- ஆபாசமாகவும் பேசி ஆடியோ அனுப்பியதாக வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
- முதல்நிலை காவலர் சிவசங்கரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுக்கா உட்பட்ட நல்லான்பிள்ளைபெற்றால் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணிபுரியும் சிவசங்கரன் என்பவர், வாட்சப் குழுவில் என்.எல்.சி வன்முறை தொடர்பாக வழக்கறிஞர்களை அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசி ஆடியோ அனுப்பியதாக வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் முதல்நிலை காவலர் சிவசங்கரனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்ததின்பேரில் முதல்நிலை காவலர் சிவசங்கரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.