உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு பேரிடர் ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டது.

அரசு பள்ளியில் பேரிடர் ஒத்திகை பயிற்சி

Published On 2023-07-19 10:13 GMT   |   Update On 2023-07-19 10:13 GMT
  • பேரிடர் ஏற்பட்டால் தன்னை சுற்றி இருப்பவர்களை எவ்வாறு மீட்பது.
  • இடர்பாடுகளை எவ்வாறு சமாளிப்பது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

பாபநாசம்:

பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பாபநாசம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் செல்வம் தலைமையில் வடகிழக்கு பருவமழை முன்னிட்டு முன்னெச்சரிக்கை போலி ஒத்திகைப் பயிற்சி நடைபெற்றது.

அப்போது பேரிடர் ஏற்பட்டால் தன்னை மட்டும் தன்னை சுற்றி இருப்பவர்களை எவ்வாறு மீட்பதுபேரிடர்ஏற்படும் இடங்களில்உள்ள பொரு ட்களைக் கொண்டுஅந்த இடர்பாடுகளைஎவ்வாறு சமாளிப்பது குறித்துதீ யணைப்பு துறையினர் பயன்படுத்திய கருவிகளை பயன்படுத்தி செய்முறை விளக்கங்களை மாணவ, மாணவிகளுக்கு தீயணைப்பு வீர்கள் செய்து காண்பித்தனர். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் மணியரசன், உதவி தலைமை ஆசிரியர் ரமேஷ் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News