உள்ளூர் செய்திகள்

பேரிடர் கால ஒத்திகை நடைபெற்ற போது எடுத்த படம்.


கடையநல்லூரில் பேரிடர் கால ஒத்திகை

Published On 2022-09-02 08:57 GMT   |   Update On 2022-09-02 08:57 GMT
  • கடையநல்லூர் தாமரைகுளத்தின் அருகே மழைக்காலத்தின் போது நீர்நிலைகளில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை மீட்பது எப்படி என்பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது
  • பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை தனித்துணை கலெக்டர் குணசேகரன் தலைமையில் இந்த ஒத்திகை நடைபெற்றது.

கடையநல்லூர்:

கடையநல்லூர் தாமரைகுளத்தின் அருகே மழைக்காலத்தின் போது நீர்நிலைகளில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களையும், கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களையும் மீட்பது எப்படி என்பது குறித்தும், அவர்களுக்கு முதலுதவி மற்றும் சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. தீயணைப்பு வீரர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், டி.என்.டி.ஜே .சேவை அமைப்பு ஆம்புலன்ஸ், 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் ,ரெட் கிராஸ் குழுவினர், லயன்ஸ் மகாத்மா காந்தி, செந்தில் ஆண்டவர் பாலிடெக்னிக்கல்லூரி, வீராசாமி செட்டியார் என். எஸ். எஸ் . மாணவர்கள் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை தனித்துணை கலெக்டர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் அரவிந்த், மோட்டார் வாகன ஆய்வாளர், கனகவல்லி, வட்டாரப் போக்குவரத்து சூப்பிரண்டு ஜீவானந்தம் ,பொதுப்பணித்துறை அலுவலர் சரவணகுமார், தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் , கடையநல்லூர் வட்டார நடமாடும் மருத்துவ குழு மருத்துவர் நஸ்ரின், இன்ஸ்பெக்டர் விஜயகுமார், நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கந்தசாமி, நகரமைப்பு ஆய்வாளர் கிருஷ்ணகுமார், ரெட் கிராஸ் மனோகரன், தவ்ஹீத் ஜமாத் நல்லூர் சுலைமான், கடையநல்லூர் வருவாய் ஆய்வாளர் சங்கரேஸ்வரி, நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சிவா, கிராம நிர்வாக அலுவலர்கள் ராமச்சந்திரன், நாராயணன், சங்கரநாராயணன், மாடசாமி, சாந்தி , கிராம நிர்வாக உதவியாளர்கள் பாலின்ரமேஷ், ஆரோக்கி யராஜ், மாரியம்மாள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News