உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் குறைதீர்ப்பு முகாம் நடந்தது.

சேதுபாவாசத்திரத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்ப்பு முகாம்

Published On 2023-03-09 10:20 GMT   |   Update On 2023-03-09 10:20 GMT
  • மாற்றுத்திறனாளிகளுக்கு 150 நாட்கள் வேலை வழங்க வேண்டும்.
  • அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பேராவூரணி:

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறை தீர்ப்பு சிறப்பு முகாம் வட்டார வளர்ச்சி அலுவலர் சடையப்பன் தலைமையில் நடைபெற்றது.

முகாமில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 150 நாட்கள் வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மாற்றுத்திறனாளிகளுக்கு 4 மணி நேர வேலை வழங்க வேண்டும். அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்ட துணை தலைவர் மேனகா உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News