டைரக்டர் சந்திரசேகர் தம்பதியினருக்கு ஆலய குருக்கள் கணேசன், கோவில் சூப்பிரண்டு ஆகியோர் நினைவு பரிசு வழங்கினர்.
டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் தம்பதியினருக்கு சதாபிஷேக விழா
- அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ஆயுள் விருத்திக்காக உத்தர சாந்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் செய்யப்படுகின்றன.
- சதாபிஷேக ஹோமம் செய்து வழிபட்ட எஸ்.ஏ.சந்திரசேகருக்கு கோவில் குருக்கள் பிரசாதம் வழங்கினார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளதுஇங்கு சஷ்டியப்தபூர்த்தி (அறுபதாம் கல்யாணம்) செய்வது சிறப்பம்சமாகும். ஆயுள் விருத்திக்காக உத்தர சாந்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகளும் செய்யப்படுகின்றன. இதற்காக பல்வேறு பகுதி களை சேர்ந்த பக்தர்கள் அமிர்தகடேஸ்வரர் கோவிலு க்கு வருகிறார்கள்.
இந்தநிலையில்டைர க்டரும், நடிகர்விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்தி ரசேகர் அவரது மனைவி ஷோபா ஆகியோர் நேற்று இந்த கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும், எஸ்.ஏ.சந்திரசேகருக்கு 80 வயது பூர்த்தி அடைந்ததையொட்டி ஆயுள் விருத்திக்காக சதாபிஷேக ஹோமம் செய்து வழிபட்டார். தொடர்ந்து விநாயகர், அமிர்தகடேஸ்வரர், அபிராமி, முருகன் உள்ளிட்ட சன்னதிகளுக்கு மனைவியுடன் சென்று சாமி தரிசனம் செய்தார். அவர்களுக்கு கோவிலின் குருக்கள் பிரசாதம் வழங்கினார். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் குருக்கள் கணேசன்சிவாச்சா ரியார் செய்தியிருந்தார்.