உள்ளூர் செய்திகள்

வயல்களில் தேங்கியுள்ள மழைநீர்.

மழையால் நேரடி நெல் விதைப்பு பணி பாதிப்பு

Published On 2022-09-02 08:24 GMT   |   Update On 2022-09-02 08:24 GMT
  • தொடர்ந்து பெய்துவரும் மழையால் வேதாரண்யத்தில் உள்ள குளம், குட்டைகள் நிரம்பி வருகிறது.
  • மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்ட நிலையில் உப்பு ஏற்றுமதி பணியும் அடியோடு பாதிக்கபட்டுள்ளது.

வேதாரண்யம்:

நாகை மாவட்டம்வே தாரண்யம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக விட்டு விட்டு மழை பெய்தது.

இதனால் வயல்களில் ஒரு அடி தண்ணீர் தேங்கி உள்ளது.

இதனால் மானாவாரி பகுதி விவசாயிகள் கோடை உழவு செய்ய முடியமாலும், நேரடி நெல் விதைப்பு செய்ய முடியாமல் உள்ளனர்.

தொடர்ந்து பெய்துவரும் மழையால் வேதாரண்யத்தில் உள்ள குளம், குட்டைகள் நிரம்பி வருகிறது.

அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு,கடிநெல்வயல், பகுதியில் மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்ட நிலையில் உப்பு ஏற்றுமதி பணியும் அடியோடு பாதிக்கபட்டுள்ளது.

மழையால்சுமார் 10 க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குசெல்லவில்லை.

தொடர்ந்து மேகமூட்டத்துடன் காணப்படுகிறது விட்டுவிட்டு மழை பெய்ததால்வியாபாரம் பாதிக்கப்பட்டு கடைவீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

Tags:    

Similar News