உள்ளூர் செய்திகள்

கால்பந்தாட்ட தொடக்க விழாவில் கலந்துகொண்டவர்கள்.

திண்டுக்கல்லில் பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி தொடக்கம்

Published On 2023-08-28 07:10 GMT   |   Update On 2023-08-28 07:10 GMT
  • முன்னாள் மாணவர் இயக்கம் மற்றும் மாவட்ட கால்பந்தாட்ட கழகம் சார்பில் தமிழக இயேசு சபை பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்தா ட்ட போட்டி நடைபெற்றது.
  • இப்போட்டியில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலை ப்பள்ளி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பள்ளியின் முன்னாள் மாணவர் இயக்கம் மற்றும் மாவட்ட கால்பந்தாட்ட கழகம் சார்பில் தமிழக இயேசு சபை பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்தா ட்ட போட்டி நடைபெற்றது.

பள்ளியின் முன்னாள் மாணவர் இயக்க துணை தலைவர் நாட்டாண்மை காஜாமைதீன் தலைமை தாங்கினார். சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக லூர்து சேவியர் கலந்து கொண்டார்.

போட்டியை மணிகண்டன் தொடங்கி வைத்தார். முன்னாள் மாணவர் இயக்குனர் ஜோசேவியர், அருட்தந்தை பாஸ்டின், துணை தலைவர் பெஞ்சமின் ஆேராக்கியம், துணை தலைமை ஆசிரியர் மரியலூயிஸ், ஆசிரியர்கள் மரிய ராஜேந்திரன், டேமியன் ஈசாக் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இப்போட்டியில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

Tags:    

Similar News