உள்ளூர் செய்திகள்

பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மலை மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

Published On 2023-04-05 10:06 GMT   |   Update On 2023-04-05 10:06 GMT
  • பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
  • சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அன்னவாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்றது.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலத்தில் மழை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம்.இந்த ஆண்டுக்கான ஆண்டு திருவிழாவையொட்டி கஞ்சி வார்த்தல், பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவையொட்டி அம்மனுக்கு மஞ்சள், பால், பன்னீர், தயிர், தேன், இளநீர், மாப்பொடி, திரவியப்பொடி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனையும், சந்தனகாப்பு அலங்காரம் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அன்னவாகனத்தில் வீதியுலா நடைபெற்றது.இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தார்.

Tags:    

Similar News