தேன்கனிக்கோட்டை அரசு பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
- வளாகத்திற்குள் தெரு நாய்கள் புகுந்து பள்ளி மாணவர்களை அச்சுறுத்துவதால் பள்ளியில் சுற்று சுவர் உடனடியாக அமைக்க வேண்டும்,
- இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளி கட்டிடத்தை அகற்ற வேண்டும்,
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பட்டாளம்மன் கோவில் தெருவில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் லில்லி மார்கிரேட் சோபியா தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவி வினோதினி சின்னதம்பி, வார்டு கவுன்சிலர் கௌரி சென்னீரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பள்ளி வளாகத்திற்குள் தெரு நாய்கள் புகுந்து பள்ளி மாணவர்களை அச்சுறுத்துவதால் பள்ளியில் சுற்று சுவர் உடனடியாக அமைக்க வேண்டும், இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளி கட்டிடத்தை அகற்ற வேண்டும், பள்ளி மாணவர்களுக்கு குடிநீர் வசதிக்காக குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பெரும்பாலான குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஹேமலதா நன்றி கூறினார். கூட்டத்தில் அனைவருக்கும் தேனீர் வழங்கப்பட்டது.