உள்ளூர் செய்திகள்

தருமபுரம் ஆதீனத்திற்கு பூரண கும்ப மரியாதை வைத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் தருமபுரம் ஆதீனம் சாமி தரிசனம்

Published On 2023-03-11 09:40 GMT   |   Update On 2023-03-11 09:40 GMT
  • சிவாச்சாரியார்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர்.
  • திருமறை பாடல்களுடன் சாமி தரிசனம் செய்தார்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு தருமபுரம் ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தரிசனம் செய்ய வந்தார்.

அவரை கோவில் செயல் அலுவலர் அறிவழகன், ஸ்தலத்தார் கயிலைமணி வேதரத்னம் ஆகியோர் தலைமையில் சிவாச்சாரியார்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். கோவிலுக்குள் சென்ற குரு மகா சன்னிதானம் மணவாளர், உள்பட பஞ்ச மூர்த்திகளையும், திருநாவுக்கரசர் வார வழிபாட்டு மன்ற ராஜேந்திரனின் திருமறை பாடல்களுடன் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர், ஊர் பிரமுகர்களான மாவட்ட வர்த்தக சங்க தலைவர் வேதநாயகம், பிராமண சங்க தலைவர் ராமசாமி, கத்தரிப்புலம் தொழில் உரிமையாளர் சொக்கலிங்கம், தேவி பாலு உள்ளிட்ட பிரமுகர்–களுக்கும், பக்தர்களுக்கும் அருள் ஆசி வழங்கினார்.

Tags:    

Similar News