உள்ளூர் செய்திகள்

விடுதியில் தருமபுரி எம்.எல்.ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன் ஆய்வு செய்த காட்சி.

அரசு கல்லூரி விடுதியை தருமபுரி எம்.எல்.ஏ ஆய்வு

Published On 2023-09-26 16:00 IST   |   Update On 2023-09-26 16:00:00 IST
  • தருமபுரியில் இயங்கி வரும் அரசு கல்லூரி விடுதியில் எம்.எல். ஏ.,ஆய்வு செய்தார்.
  • விடுதியில் போதிய வசதிகள் இல்லை என் மாணவர்கள் தெரிவித்தனர்.

தருமபுரி டாக்டர் அம்பேத்கார் அரசு கல்லூரி மாணவர்கள் விடுதி அதியமான்கோட்டை அருகே தனியார் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இவ்விடுதியில் சுமார் 440 மாணவர்கள் தங்கி கல்லூரியில் கல்வி பயின்று வருகிறார்கள்.

இம்மாணவர்களுக்கு ஒட்டப்பட்டி அருகே புதியதாக அரசு விடுதி அமைக்கப்பட்டு சில வருடங்க ளாகியும் திறக்கப்ப டாமல் பூட்டியே உள்ளது.

தற்போது உள்ள விடுதி வாடகை கட்டிடத்திற்கு அரசு மாதந்தோறும் ரூ. 65 ஆயிரம் வாடகை செலுத்தி வருகிறது. இக்கட்டிடத்தில் மாணவர்களுக்கு போதுமான கழிவறை வசதி, தூய்மையான குடிநீர் வசதி, மழைக்காலங்களில் விடுதியின் மேற்கூரை பழுதால் தங்கும் அறையில் நீர் வடிந்து ஒழுகுதல், மாணவர்களின் பாதுகாப்பு குறைவு, கல்லூரிக்கு செல்ல பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் நிலையை அறிந்த, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் விடுதியின் கழிவறை, தங்கும் அறை, உணவு, குடிநீர் போன்றவற்றை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

பின்னர், மாணவர்க ளிடையே அமர்ந்து இரவு உணவு சாப்பிட்ட அவர், வழங்கப்படும் உணவு குறித்தும் மாண வர்களி டையே கேட்டறிந்தார். மாணவர்கள், விடுதியில் போதுமான வசதியின்றி அவதியுறும் நிலையில் உள்ளனர். 440 மாணவர்களுக்கு இரண்டு கழிவறைகளை மட்டுமே உள்ளதால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலையால் கல்லூரி செல்வதற்கு காலதாமதம் ஏற்படுகிறது.

இதனால் புதியதாக அமைக்கப்பட்டுள்ள விடுதி கட்டிடத்தை உடனடியாக திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்வதாக மாணவர்களி டையே தெரிவித்தார். இந்த ஆய்வின் போது, தனி வட்டாட்சியர் ஆர்.சரவணன், விடுதியின் காப்பாளர் மூ.சாமிநாதன், கூடுதல் காப்பாளர் மகாலிங்கம், அரசு கல்லூரி மகளிர் விடுதியின் தேர்வு குழு உறுப்பினர் ஒ.கே.கிருஷ்ணமூர்த்தி, விடுதி உதவியாளர், சமையலர் , உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Similar News