உள்ளூர் செய்திகள்

கூடைப்பந்து போட்டியில் தருமபுரி தொன் போஸ்கோ கல்லூரி மாணவர்கள் சாதனை

Published On 2023-10-04 15:57 IST   |   Update On 2023-10-04 15:57:00 IST
  • தருமபுரி தென் போஸ்கோ கல்லூரி மாணவர்கள் கூடைப்பந்து போட்டியில் சாதனை படைத்தனர்.
  • வெற்றி மாணவர்களை பேராசிரியர்கள் பாராட்டினர்

பெரியார் பல்கலைக் கழகக் கல்லூரிகளுக்கு இடையேயான கூடைப் பந்துப் போட்டிகள் ராசிபுரம் மெட்டாலா, லயோலா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கடந்த 25, 26-ந் தேதிகளில் 2 நாட்கள் நடைபெற்றன. சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 12 அணிகள் இப்போட்டி களில் பங்குபெற்றன.

இதில் 3-ம் இடத்திற்கான போட்டியில், தருமபுரி தொன் போஸ்கோ கல்லூரி அணியுடன், ராசிபுரம் மெட்டாலா, லயோலா கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணியினர் விளை யாடினர். இப்போட்டியில் 51-46 என்ற புள்ளிக் கணக்கில் தருமபுரி, தொன் போஸ்கோ கல்லூரி அணி 3-ம் இடம் பிடித்து வெற்றிப்பெற்றது.

வெற்றி பெற்ற மாண வர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் பேராசிரியர் சேவியர் டெனிஸ் ஆகியோரை் கல்லூரிச் செயலர் ராபர்ட் ரமேஷ் பாபு, முதல்வர் ஆஞ்சலோ ஜோசப், துணை முதல்வர் பாரதி பெர்னாட்ஷா, பொருளாளர் அந்தோணி பாப்புராஜ், மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.

Similar News