உள்ளூர் செய்திகள்

பக்தர்கள் தலையில் பூசாரி தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது.

பழனி அருகே கோவில் திருவிழா பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்

Published On 2022-08-13 05:40 GMT   |   Update On 2022-08-13 05:40 GMT
  • ஆடி மாதத்தில் குரும்பர் சமுதாய மக்கள் சார்பில் கோவில் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
  • கோவில் பூசாரி பக்தர்கள் தலையில் ஆவேசமாக தேங்காயை உடைத்து சிதறவிட்டார். இது பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைப்பதாக இருந்தது.

பழனி:

பழனி அருகே பாப்பம்பட்டியில் பழமையான மகாலட்சுமிஅம்மன் கோவில் உள்ளது. ஆடி மாதத்தில் குரும்பர் சமுதாய மக்கள் சார்பில் கோவில் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு நடைபெற்ற திருவிழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்திருந்தனர். குதிரையாறு அணையில் இருந்து புனிதநீர் கொண்டுவரப்பட்டு மகாலட்சுமி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதனைதொடர்ந்து கோவில் பூசாரி பக்தர்கள் தலையில் ஆவேசமாக தேங்காயை உடைத்து சிதறவிட்டார். இது பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைப்பதாக இருந்தது. இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில்,

பல வருடங்களாக கோவில் திருவிழாவில் நேர்த்திக்கடன் செலுத்தி வருகிறோம். நினைத்ததை அம்மன் நிறைவேற்றி தருவார். இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர் என்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பாப்பம்பட்டி, குப்பம்பாளையம், வாடிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News