உள்ளூர் செய்திகள்

பக்தர்களுக்கு தி.மு.க இளைஞரணி துணை அமைப்பாளர் கரிகால பாண்டியன் அன்னதானம் வழங்கினார்.

நிலக்கோட்டையில் பக்தர்களுக்கு அன்னதானம்

Published On 2022-08-04 05:57 GMT   |   Update On 2022-08-04 05:57 GMT
  • ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு பக்தர்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்துவந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
  • 2500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நிலக்கோட்டை:

நிலக்கோட்ைட காமராஜர் நகரில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு பக்தர்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்துவந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தி.மு.க மாவட்ட இளைஞரணி துணைஅமைப்பாளர் கரிகாலபாண்டியன் தலைமையில் 2500 பேருக்கு மேல் பங்கேற்று உணவருந்தி சென்றனர்.

நிகழ்ச்சியில் கோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தா, கரிகாலபாண்டியன், கோவில் நிர்வாகிகள் சுரேந்திரன், பானுமதி, நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சந்திரன், முருகன், செல்வராஜ், சாத்தப்பன், செல்வம், யோகேஷ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News