அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு
- ஆடி அமாவாசையை முன்னிட்டு நேற்று ஏராளமான பக்தர்கள் ஒன்று கூடி சிறப்பு வழிபாடு செய்தனர்.
- சுவாமி ஊர்வலம் வந்து வைகை ஆற்றில் இறங்கினார்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி வீர ஆஞ்சநேயர் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு நேற்று ஏராளமான பக்தர்கள் ஒன்று கூடி சிறப்பு வழிபாடு செய்தனர். மேலும் வைகை ஆற்றில் தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் செய்தனர்.
பிள்ளையார்நத்தம், பெருமாள்கோவில்பட்டி, செக்காபட்டி, சிறுநாயக்கன்பட்டி, சொக்குப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்தனர். மேலும் சுவாமி ஊர்வலம் வந்து வைகை ஆற்றில் இறங்கினார்.
அப்போது பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கோஷங்கள் எழுப்பினர். பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார பணிகளை பிள்ளையார்நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் முனிராஜா, ஊராட்சி செயலர் சின்னசாமி ஆகியோர் செய்திருந்தனர்.
நிலக்கோட்டை டி.எஸ்.பி. சுகுமாறன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் குரு வெங்கட்ராஜ் (நிலக்கோட்டை), வனிதா (விளாம்பட்டி) மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.