உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

கம்பம் அருகே வாகனம் கவிழ்ந்து அய்யப்ப பக்தர் பலி

Published On 2022-08-18 05:18 GMT   |   Update On 2022-08-18 05:18 GMT
  • கம்பம் தனியார் மண்டபம் அருகே வந்த போது பைபாஸ் சாலையில் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது.
  • விபத்தில் காரில் வந்தவர்களில் 3 பேர் படுகாயமடைந்தனர். அய்யப்ப பக்தர் ஒருவர் பலியானார்.

தேனி:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை சேர்ந்தவர் பூபதி(27). இவர் தனது நண்பர்கள் ராஜசேகர், மோகன்ராஜ், சுந்தர் ஆகியோருடன் காரில் பரமத்திவேலூரில் இருந்து சபரிமலை அய்யப்பன்கோ விலுக்கு வந்தார்.

கம்பம் தனியார் மண்டபம் அருகே வந்த போது பைபாஸ் சாலையில் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது. பின்னர் அங்கிருந்த சாலை யோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் 4 பேரும் காயமடைந்தனர். அவர்கள் கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்லப்பட்ட னர். மேல் சிகிச்சைக்காக தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது அங்கு பூபதி உயிரிழந்தார்.

மற்ற 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

Tags:    

Similar News