உள்ளூர் செய்திகள்

டெங்கு விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.

டெங்கு விழிப்புணர்வு கூட்டம்

Published On 2023-09-23 07:58 GMT   |   Update On 2023-09-23 07:58 GMT
  • திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மருத்துவ மாணவர்களுக்கான டெங்கு விழிப்புணர்வு கூட்டம் சமூக மருத்துவத்துறை சார்பில் நடத்தப்பட்டது.
  • முடிவில் அனைவரும் டெங்கு ஒழிப்பு சுகாதார உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மருத்துவ மாணவர்களுக்கான டெங்கு விழிப்புணர்வு கூட்டம் சமூக மருத்துவத்துறை சார்பில் நடத்தப்பட்டது. அதில் பல்வேறு துறைகளைச் சார்ந்த பேராசிரியர்கள் டெங்கு விழிப்புணர்வு குறித்து உரையாற்றினர்.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி டீன் சுகந்தி ராஜகுமாரி தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார். துணை முதல்வர் சலீம், அனைத்து துறைத் தலைவர்கள், டாக்டர்கள் மற்றும் 300 மருத்துவ மாணவர்கள் பங்கேற்றனர். முடிவில் அனைவரும் டெங்கு ஒழிப்பு சுகாதார உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Tags:    

Similar News