உள்ளூர் செய்திகள்

தஞ்சையில் சி.ஐ.டி.யூ சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தஞ்சையில் ஆர்ப்பாட்டம்

Published On 2023-10-27 09:24 GMT   |   Update On 2023-10-27 09:24 GMT
  • டி.பி.சி ஊழியர்கள் மற்றும் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு சட்டப்படியான தீபாவளி போனஸ் வழங்க வேண்டும்.
  • ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

தஞ்சாவூர்:

தமிழ்நாடு நுகர்பொ ருள் வாணிப கழகத்தில் பணிபுரியும் டி.பி.சி ஊழியர்கள் மற்றும் சுமைப்பணி தொழிலா ளர்களுக்கு சட்டப்படியான தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று தஞ்சை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ஜெயபால்,

சுமைப்பணி சம்மேளன தலைவர் தலைவர் வெங்கடபதி , மாவட்ட பொருளாளர் பேர்நீதி ஆழ்வார், மாவட்ட துணை செயலாளர்கள் அன்பு, சாய் சித்ரா, ஆட்டோ சங்கம் மாநில செயலாளர் ராஜா, நகர துணை தலைவர் செல்வம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

Similar News