உள்ளூர் செய்திகள்

மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம்

Published On 2023-08-29 09:49 GMT   |   Update On 2023-08-29 09:49 GMT
  • தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
  • முடிவில் மண்டல பொருளாளர் பக்கிசாமி நன்றி கூறினார்.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளரை கண்டித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஊழியர் தொழிற்சங்கம் சார்பில் மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல தலைவர் நக்கீரன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் வள்ளுவன் கலந்து கொண்டு பேசினார்.

இதில் மண்டல சங்க செயலாளர் தம்பிதுரை, கவுன்சிலர் செயலாளர் வீரமணி, சிறப்பு தலைவர் முத்தையன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர். முடிவில் மண்டல பொருளாளர் பக்கிசாமி நன்றி கூறினார்.

Tags:    

Similar News