உள்ளூர் செய்திகள்

கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

பெரியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு ஆர்ப்பாட்டம்

Published On 2023-05-16 08:03 GMT   |   Update On 2023-05-16 08:03 GMT
  • பெரியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஊதிய உயர்வு வேண்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விழுப்புரம்:

திருவெண்ணைநல் லூர் அருகே உள்ள பெரிய செவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஊதிய உயர்வு வேண்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அண்ணா தொழிற்சங்கம் மற்றும் அனைத்து தொழிற் சங்க கூட்டமைப்பு சார்பாக அண்ணா தொழிற் சங்க தலைவரும். கூட்டமைப்பு செயலாளருமான பழனி தலைமையில் கூட்டமைப்பு தலைவர் தங்கவேல் முன்னிலையில் ஊதிய உயர்வு வழங்க கோரி அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பப் பட்டன. இதில் பணியாளர் சங்கம் பொறுப்பாளர் முரளி, அண்ணா தொழிற் சங்க செயலாளர் திருவேங்கடம், பா.ம.க. செயலாளர் பழனிவேல், அம்பேத்கார் இயக்கம் செயலாளர் ஆறுமுகம் மற்றும் தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News