உள்ளூர் செய்திகள்

மின்வாரியத்தில் இ-டெண்டர் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

Published On 2023-10-21 07:46 GMT   |   Update On 2023-10-21 07:46 GMT
  • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொன்னேரி கோட்டத் தலைவர் அருள்நாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் மதன் கலந்து கொண்டு கண்டன விளக்க உரையாற்றினார்.

பொன்னேரி:

பொன்னேரி கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சென்னை வடக்கு கிளை சி.ஐ.டி.யு. சார்பில் தமிழ்நாடு மின்வாரியத்தை தனியார் மயமாக்குவதை கண்டித்தும் இ-டெண்டர் முறையை ரத்து செய்ய வலியுறுத்தியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தினக்கூலி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொன்னேரி கோட்டத் தலைவர் அருள்நாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் இந்திய ஜன நாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் மதன் கலந்து கொண்டு கண்டன விளக்க உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் ஊழியர்கள் ஒப்பந்த தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News