உள்ளூர் செய்திகள்

ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன்.

திருச்செந்தூர் துர்க்கை அம்மன் கோவிலில் ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம்

Published On 2022-08-06 09:18 GMT   |   Update On 2022-08-06 09:18 GMT
  • இந்த அலங்காரத்தில் ரூ.2000, ரூ.500, ரூ.200, ரூ.100, ரூ.50, ரூ.20, ரூ.10 ஆகிய ரூபாய் நோட்டுகள் பயன்படுத்தப்பட்டிருந்தன.
  • வழிபாட்டில் சுமங்கலிப் பெண்கள் ஏராளமானோர் வரலட்சுமி விரதமிருந்து அம்மனை வழிபாடு செய்தனர்.

திருச்செந்தூர்:

திருச்செந்தூரில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற துர்க்கை அம்மன் கோவிலில் வரலட்சுமி விரதம் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் அம்பாளுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.ரூபாய் நோட்டுகளால் செய்யப்பட்ட இந்த அலங்காரத்தில் ரூ.2000, ரூ.500, ரூ.200, ரூ.100, ரூ.50, ரூ.20, ரூ.10 ஆகிய ரூபாய் நோட்டுகள் பயன்படுத்தப்பட்டிருந்தன. இந்த பணத்தின் மொத்த மதிப்பு சுமாா் ரூ.1 லட்சம் ரூபாய் ஆகும்.

வழிபாட்டில் சுமங்கலிப் பெண்கள் ஏராளமானோர் வரலட்சுமி விரதமிருந்து அம்மனை வழிபாடு செய்தனர். முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது.

Tags:    

Similar News