உள்ளூர் செய்திகள்

ரிஷிவந்தியம் அருகே டேங்க் ஆபரேட்டருக்கு கொலை மிரட்டல்: ஊராட்சி மன்றத் தலைவர் மீது வழக்கு

Published On 2022-10-28 12:32 IST   |   Update On 2022-10-28 12:32:00 IST
  • குடிநீர் வினியோகம் செய்வதற்காக அங்குள்ள மோட்டார் அறைக்கு சென்றார்.
  • போலீசார் ரங்கநாதன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

கள்ளகுறிச்சி:

கள்ளகுறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அடுத்த வெங்க லம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (41). டேங்க் ஆபரேட்டரான இவர் பொதுமக்களுக்கு குடிநீர் வினி யோகம் செய்வதற்காக அங்குள்ள மோட்டார் அறைக்கு சென்றார். அப்போது அங்கு வந்த வெங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன் (வயது 45) என்பவர் குடிநீர் வினி யோகம் செய்வது தொடர்பாக சரவணனை திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சரவணன் ரிஷிவந்தியம் போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் ரங்கநாதன் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன் ரிஷிவந்தியம் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், டேங்க் ஆபரேட்டர் சரவணன் பொது மக்களுக்கு சரிவர குடிநீர் விநியோகம் செய்ய வில்லை. இதை கேட்ட என்னை ஆபாசமாக திட்டியதாக கூறியிருந்தார். அதன்அடிப்படையில் டேங்க் ஆபரேட்டர் சரவணன் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News