உள்ளூர் செய்திகள்

குளித்தலை விவசாயிக்கு கொலை மிரட்டல்

Published On 2023-08-23 14:54 IST   |   Update On 2023-08-23 14:54:00 IST
  • தகராறு செய்து , மிரட்டல் விடுத்தவர் கைது
  • விவசாயின் சரக்கு வாகன கண்ணாடி உடைப்பு

கரூர்,

குளித்தலை அடுத்த, கள்ளப்பள்ளி, கருப்பத்துார் தெற்கு தெருவை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 40). விவசாயி. இவர் பொலிரோ பிக் அப் சரக்கு வாகனம் வைத்து தொழில் செய்து வருகிறார். தன் வீட்டில் இருந்தபோது, அதே ஊரை சேர்ந்த மாணிக்கம் என்பவர் வீட்டிற்கு வந்து தகாத வார்த்தையில் பேசி திட்டி, தகராறு செய்து வீட்டில் நிறுத்தி வைத்த பொலிரோ பிக் அப் சரக்கு வாகனத்தின் கண்ணாடியை உடைத்து, கொலை மிரட்டல் விடுத்தார்.இது குறித்து பாண்டியன் கொடுத்த புகார்படி, லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணிக்கத்தை கைது செய்தனர்.

Tags:    

Similar News