உள்ளூர் செய்திகள்

ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் பொதுமக்கள்.

திண்டுக்கல் நகரில் ஷேர் ஆட்டோக்களில் தொடரும் விதி மீறல் பயணங்கள் மாணவர்கள் பாதுகாப்பு கேள்விக்குறி

Published On 2022-10-14 07:39 GMT   |   Update On 2022-10-14 07:39 GMT
  • போதிய பஸ் வசதி இல்லாததால் இவர்கள் பெரும்பாலும் ஷேர் ஆட்டோ, குட்டியானை போன்ற வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
  • பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு இதுபோன்ற விபரீத பயணங்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் நகரை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இதுபோன்ற பகுதிகளுக்கு போதிய பஸ் வசதி இல்லாததால் இவர்கள் பெரும்பாலும் ஷேர் ஆட்டோ, குட்டியானை போன்ற வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இதுதவிர சிறுமலை போன்ற மலைகிராமங்களில் இருந்து விளைபொருட்கள் விற்பனைக்கு கொண்டுவருவதற்கும், அவசர தேவைகளுக்கு செல்வதற்கும் ஷேர் ஆட்டோக்களை பயன்படுத்தி வருகின்றனர்.

மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தினந்தோறும் ஏராளமான ஆட்டோக்களில் பள்ளி மாணவ-மாணவிகள் அழைத்துச்செல்லப்படுகின்றனர். ஓரு ஆட்டோவிற்கு 5 மாணவர்கள் மட்டுமே அழைத்துச்செல்லப்பட வேண்டும் என போக்குவரத்துறை அறிவித்து இருந்தாலும் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகளை மூட்டைகள் போல அடுக்கி வைத்து அழைத்துச்செல்கின்றனர்.

இதேபோல குட்டியானை வாகனங்களில் மாணவ-மாணவிகளும், கூலித்தொழிலாளர்களும் அதிகளவு ஏற்றிச்செல்லப்படுவது தினசரி நிகழ்வாக உள்ளது.

பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு இதுபோன்ற விபரீத பயணங்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News